கிளிநொச்சியில் காணாமல் போன 16 வயது இளைஞன் மட்டக்களப்பில் கண்டுபிடிப்பு!!


கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்தன் என்பவர் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போயிருந்தார் இந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த இளைஞன் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் இவர் வீடு திரும்பவில்லை இதனையடுத்து குறித்த இளைஞரின் தாயார் போலீசாரின் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்சேனை பகுதியில் அப்பகுதி இராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார்.

குறித்த நபர் அவரது காதலியுடன் இங்கு வந்து இருப்பதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.