வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலையின் தசாப்த விழா நிகழ்வுகள் நேற்று மாலை மிகவும் கோலகலமான முறையில் இடம்பெற்றது.பாடசாலையின் அபிவிருத்திக்குழு பெற்றோர்கள் மற்றும் கல்வி சமூகத்தின் முழுதான பங்களிப்புடன் பாடசாலையின் அதிபர் கே.கோமளம் தலைமையில் இடம்பெற்ற நி;கழ்வுகளில் பிரதம அதிதிகளாக திருக்கோவில் வலய கல்வி பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விசேட அதிதிகளாக பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் ஓய்வு பெற்ற அதிபரும் பாடசாலையின் முதலாவது அதிபருமான பி.தணிகாசலம் மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர் பி.பரமதயாளன் திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் பொது சுகாதார பரிசோதகர் ப.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாடசாலையின் தசாப்த விழா நினைவுப் பெயர்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதன் பின்னர் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டதுடன் அதிதிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரது வரவேற்பையும் பெற்றுக்கொண்டது.
குறிப்பாக கண்ணகி வழக்குரை நாடகம் வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கச் செய்தது.
இதேநேரம் பாடசாலையின் முதல் அதிபராக நியமனம் பெற்று பாடசாலை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பி.தணிகாசலம் அவர்கள் பாட்சாலை கல்வி சமூகத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்காற்றிய வலயக்கல்விப்பணிப்பாளர் பிரதேச செயலாளர் பிரதேச சபை தவிசாளர் ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் பாடசாலை அதிபர் அபிவிருத்திக்குழு செயலாளர் மற்றும் உறுப்பினர் பாடசாலை வரலாற்றில் புலமைபரிசில் பரீட்சையில் அதிக புள்ளியினை பெற்ற மாணவி உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கடந்த 6 வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தியடைந்த 92 மாணவர்கள் அதிதிகளினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் விசேட அதிதிகளாக பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் ஓய்வு பெற்ற அதிபரும் பாடசாலையின் முதலாவது அதிபருமான பி.தணிகாசலம் மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர் பி.பரமதயாளன் திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் பொது சுகாதார பரிசோதகர் ப.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாடசாலையின் தசாப்த விழா நினைவுப் பெயர்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதன் பின்னர் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டதுடன் அதிதிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரது வரவேற்பையும் பெற்றுக்கொண்டது.
குறிப்பாக கண்ணகி வழக்குரை நாடகம் வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கச் செய்தது.
இதேநேரம் பாடசாலையின் முதல் அதிபராக நியமனம் பெற்று பாடசாலை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பி.தணிகாசலம் அவர்கள் பாட்சாலை கல்வி சமூகத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்காற்றிய வலயக்கல்விப்பணிப்பாளர் பிரதேச செயலாளர் பிரதேச சபை தவிசாளர் ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் பாடசாலை அதிபர் அபிவிருத்திக்குழு செயலாளர் மற்றும் உறுப்பினர் பாடசாலை வரலாற்றில் புலமைபரிசில் பரீட்சையில் அதிக புள்ளியினை பெற்ற மாணவி உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கடந்த 6 வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தியடைந்த 92 மாணவர்கள் அதிதிகளினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.