மண்முனைப்பற்றில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!


மட்டக்களப்பு- மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வினை மண்முனைப்பற்று பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர்.

ஆரையம்பதி பிரதேச வர்த்தகர்களின் நிதி அனுசரணையிலேயே மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முதலாவது தவணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி கற்றலை மேம்படுத்தும் வகையிலேயே மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வீ.லோகினி, கணக்காளர் வி.நாகேஸ்வரன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் டி .மதிராஜ் உட்பட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்திருந்தனர்.