திருகோணமலை– இறக்கக்கண்டி – வாழையூற்று கடலில் குளிக்கச்சென்றிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இன்று (04) முற்பகல் 11.30 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
13 மற்றும் 14 வயதான இரண்டு சிறுவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்களின் சடலங்கள் நிலாவௌி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் குச்சவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நேற்று (03) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்கள் வாழைத்தோட்டம், மாவடிச்சேனையை சேர்ந்த 12 மற்றும் 14 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.