மட்டக்களப்பில் பிரபல ஹோட்டல் உரிமையாளர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் குறித்த ஹோட்டலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் இருந்தே குறித்த உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலையில் உரிமையாளர் எழுந்திருக்காத நிலையில் ஊழியர்கள் ஹோட்டல் அறையினை திறந்தபோது அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த ஹோட்டல் உரிமையாளர் கோட்டைக்கல்லாறை சேர்ந்தவர் எனவும் புலம்பெயர்நாடு ஒன்றிலிருந்து வருகைதந்து ஹோட்டல் ஒன்றை நடாத்திருவருவதாகவும் தெரியவருகின்றது.

இது தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜீவானந்தன் முன்னெடுத்ததுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு கொண்டுசெல்லவும் பணிப்புரை விடுத்தார்.

இந்த உயிரிழப்பு குறித்து மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.