மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 07கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
கடந்த 15தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவில் இன்று அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் மாமாங்கம் பகுதிகளில் 110பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் 50பேருக்கு பீசிஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் அன்டிஜன் பரிசோதனைகளில் 07கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொவிட் தொற்று பரவாமல் இருப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் அதனை மீறும் வகையில் செயற்பட்டுவருவதாகவும் சுகாதார துறையினர் குற்றஞ்சாட்டினர்.