மட்டக்களப்பில் மூன்றாவது அலையில் 2711பாதிப்பு –நேற்று 04மரணங்கள்

கடந்த மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9148பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.மயூரன் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 57கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் 04பேர் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 3637பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் 54மரணங்கள் பதிவாகியுள்ளது. கொரனா மூன்றாவது அலையின் காரணமாக 2711பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 42மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஏழு தினங்களில் 707 கொரனா தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்’ அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9148பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.