மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் 104 தொற்றாளர்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றையதினம் 104கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றுக:குள்ளானோரை கண்டறியும் வகையில் தொடர்ச்சியான அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு வெட்டுக்காடு,ஊறணி,இருதயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தொற்றாளர்களை இனங்காணும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தனிமைப்படுத்தப்பட்;டு இருந்தவர்கள்,கொரனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,பிரதேச மக்கள் என பலருக்கு இன்றைய தினம் பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 08பேரும் ஆரையம்பதி சுகாதார பிரிவில் 23பேரும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17பேரும்,கோறளைப்பற்று மத்தி சுகாதார பிரிவில் 14பேரும் களுவாஞ்சிகுடியில் 07பேரும் வாழைச்சேனையில் ஒருவரும் ஓட்டமாவடியில் 08பேரும் செங்கலடியில் 05பேரும் பட்டிப்பளையில் 02பேரும் கிரானில் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமாக 104பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.