மயிலத்தமடுவில் கைதான பண்ணையாளர்களை விடுவிக்ககோரி வீதியில் இறங்கிய மக்கள்!

 மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரையான மயிலத்தமடுவில் மாடு மேய்க்க சென்ற பண்ணையாளர்கள் ஆறுபேர் நேற்று சிங்கள காடையர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். 

 அவர்களை விடுதலை செய்யக்கோரி இவ்வாறான கடத்தல்  சம்மவங்கள் இடம்பெறக்கூடாது. என்பதை வலியுறுத்தியும் இன்று 10/01/2021 ஞாயிற்றுக்கிழமை சிந்தாண்டி சந்தியில் பண்ணையாளர்கள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் தமிழ்தேசிய அரசியல் பிரமுகர்கள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.

 இந்தபோராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.அரியதேத்திரன்,சீ.யோகேஸ்வரன் ஞா.ஶ்ரீநேசன், கிழக்குமாகாணசபை முன்னாள் உனுப்பினர் இ.பிரசன்னா, வாலிபர் அணிதலைவர் கி.சேயோன், தமிழ்தேசியமக்கள்முன்னணி மட்டக்களப்பு மாவட்ட தலைவர் த.சுரேஷ், பிரதேச சபை உறுப்பினர்களான குணசீலன், தேவன், மாமனிதர் ஜோசப்பர ராச்சிங்கம் அமைப்பு தலைவி கலைவாணி மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வே. தவராசா மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மதகுருமார் என பலரும் கலந்து கொண்டன்னர்.