பெரியகல்லாறில் சிறிய தாயின் வீட்டில் இருந்த சிறுமியின் சடலம் மீட்பு –தாய் வெளிநாட்டில்


(புருஷோத்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 11வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு 02ஆம் குறிச்சி,நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தாயார் வெளிநாடுக ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி சிறிய தாயின் வீட்டிலேயே இருந்துவந்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமியின் அம்மமாவின் வீட்டில் இருந்தபோது குறித்த சிறுமி தாக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமி கிராம சேவகரின் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது நேற்று வைத்தியசாலையில் இருந்த சிறுமியை சிறுமியின் சிறிய தாயார் அழைத்துச்சென்ற நிலையில் இன்று காலை சிறுமி குறித்த சிறிய தாயின் வீட்டில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.