அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களில் இதுவரை 156 பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை அட்டாளைச்சேனையில் 13பேரும் அக்கரைப்பற்றில் 06பேரும் ஆலையடிவேம்பில் 02பேரும் திருக்கோவில் மற்றும் கல்முனை தெற்கு ஆகியவற்றில் தலா ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 303 தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் சட்டங்களையும் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் மிகவும் விழிப்பாக செயற்பட்டு தகவல்களை சுகாதார துறையினருடன் பகிர்ந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.