மக்கள் வழங்கிய ஆணைக்கு நன்றி கூறுவதுடன் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற அனைவரிதும் ஓத்துழைப்புக்கள் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு அலுவலகமானது பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்றுகொன்ட பிள்ளையான் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கா.கருணகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வின் போது தனது மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரது கடமைகளை சுபநேரத்தில் ஏற்று கொண்டு தனது பணிகளை ஆரம்பித்தார்.
இவ் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் கட்சியின் உயர் மட்ட பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் மக்கள் வழங்கிய இந்த ஆணைக்கு தாம் நன்றி கூறுவதுடன் அவர்களது முக்கிய தேவைகளை தாம் நிறைவேற்ற அனைவரிதும் ஓத்துழைப்புக்கள் தமக்கு முக்கியமென இங்கு கருத்துதெரிவித்தார்.