கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இராத உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றதுடன் நேற்று பகல் ஆடிஅமாவசை தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது.
நேற்று மாலை வசந்த மண்டபத்தில் மாமாங்கேஸ்வரருக்கு திருப்பொன்னூஞ்சல் பூஜை சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கொடித்தம்பத்தில் சிறப்பு பூஜை நடைபெற்று கொடியிறக்கம் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த உற்சவத்தில் இறுதியாக சண்டேஸ்வரரதுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இராத உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றதுடன் நேற்று பகல் ஆடிஅமாவசை தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது.
நேற்று மாலை வசந்த மண்டபத்தில் மாமாங்கேஸ்வரருக்கு திருப்பொன்னூஞ்சல் பூஜை சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கொடித்தம்பத்தில் சிறப்பு பூஜை நடைபெற்று கொடியிறக்கம் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த உற்சவத்தில் இறுதியாக சண்டேஸ்வரரதுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.