விடுதலைப்புலிகளுக்கு பிரேமதாச 5000துவக்குகள் வழங்கினார் –மீண்டும் சூடு பிடிக்கும் சர்ச்சை

சஜித்தின் தந்தையே 5000துவக்குகள் தந்து,5000கிரனேட்டுகளும் தந்து ஒரு கோடி தோட்டாக்களும் தந்து,25கோடிக்கு மேல் பணமும் தந்து விடுதலைப்புலிகளை வளர்த்ததுவிட்டவர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பிள்ளையானை குழிதோண்டி புதைக்கவேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியில் உழைத்தவர்களை வேட்பாளராக நியமித்திருந்தால் அக்கட்சியில் பிள்ளையான் வெற்றிபெற்றிருப்பார் எனவும் முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் களுவாஞ்சிகுடியில் நேற்று நடைபெற்றது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் த.வரதராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை வேட்பாளர் திருமதி திருமதி வித்தியாபதி முரளிதரன்,கட்சியின் செயலாளரும் வேட்பாளருமான வி.கமலதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கட்சியின்வேட்பாளர்கள் உரையாற்றியதுடன் இந்த கூட்டத்தில் பெருமளவான ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அண்மையில் 30 செக்கண் வீடியோ அணுகுண்டு வெடித்ததுபோன்று இருந்தது.எங்கும் கருணா அம்மானின் செய்தியே காணப்பட்டது.நான் அங்கு ஒரு மணித்தியாலமாக பேசினேன்.பொதுவாக யுத்ததில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் பேசினேன்.மீண்டும் ஒரு இழப்பு தேவையில்லையென்று பேசினேன்.அதனை சஜித் பிரேமதாச எடிட்டிங் செய்து அவரே வெளியிட்டார். அவரின் தலையில் அவரே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டார்.
சஜித்தின் தந்தையே 5000துவக்குகள் தந்து,5000கிரனேட்டுகளும் தந்து ஒரு கோடி தோட்டாக்களும் தந்து,25கோடிக்கு மேல் பணமும் தந்து விடுதலைப்புலிகளை வளர்த்தது உங்கள் தந்தையென்று அவரிடம் கூறியுள்ளேன்.இன்று சிங்கள மக்கள் மத்தியில் செல்லமுடியாத நிலை சஜித்திற்கு ஏற்பட்டுள்ளது.என்னை சுரண்டினால் பிரச்சினை அவருக்குத்தான் என்பது அவருக்கு விளங்கிவிட்டது.
அதற்குத்தான் பிரதமர் கூறினார்.கருணாகருணா என்று கத்தாமல் வாயை பொத்திட்டு இருங்கள் என்று கூறிவிட்டார் பிரதமர்.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மட்டக்களப்புக்கு வரும்போது இங்குள்ள மக்கள் அவருக்கு ஈக்கு கட்டினால் அடிக்கவேண்டும்.இவர்தான் சொல்லின் செல்வன் என மட்டக்களப்பு மக்களால் போற்றப்பட்ட இராஜதுரை எம்பியை வடக்கில் துரத்தியடித்தவராகும்.
அம்பாறை மாவட்டத்தில் கோடிஸ்வரன் காடு முலுவதையும் அழித்துவிட்டார்.கஞ்சிகுடிச்சாறு பகுதியில் கள்ளமரம் ஏத்தி அளித்துவிட்டார்.மண் விற்பனை செய்ற,ஒப்பந்தவேலைகளை செய்கின்றவர்கள் அங்கு தேவையில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கியதே நான்தான்.யுத்தம் நடக்கின்றது இந்த யுத்தம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தவேண்டும்.யுத்ததின் இழப்புகள் பாதிப்புகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும் என்று சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் எனக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனை நான் தலைவரிடம் சென்று கூறினேன்.நான் சுடச்சொன்னவர்களையெல்லாம் என்னிடம் கொண்டுவருகின்றாயா என்று என்னிடம் கேட்டார்.அதுதான் நான் விட்ட பிழை.அன்று அவர் சொன்னதை செய்திருக்கவேண்டும்.வன்னியில் அனைவரையும் அழைத்து விடுதலைப்புலிகளின் தலைவரால் சம்பந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.ஆனால் இன்று சம்பந்தர் ஐயா புலிகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லையென்று கூறுகின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்ப ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நல்ல தலைவர்கள் இருந்தார்கள்.விநாயகமூர்த்தி ஐயா ஜோசப்பரராஜசிங்கம் போன்ற சிறந்த தலைவர்கள் இருந்தார்கள்.அந்தவேளையில் பாராளுமன்றத்தில் சிறப்பான முறையில் குரல் ஒலிக்கப்பட்டது.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல கள்ளர்கள் இணைந்த காரணத்தினால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கள்ளர்களின் கூட்டமைப்பாக மாறிவிட்டது.பாராளுமன்றம் செல்வதற்கு பணம் படைத்தவன் தேவையில்லை.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் காணிகள் பெருமளவில் அபகரிக்கப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டத்தில் 22 தமிழ் கிராமங்கள் இல்லாமல்போயிவிட்டது.47ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளது.
சில மதகுருமார்கள் துள்ளுவதை காணமுடிகின்றது.அன்று ஹிஸ்புல்லா அவர்கள் வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று பேசுகின்றார்.அவரை யாரும் கைதுசெய்யவில்லை.ஷக்ரானுடன் புகைப்படத்தில் உள்ள அரசியல்வாதிகள் பலர் உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் நான் பல அபிவிருத்திகளை செய்துள்ளேன்.தற்போது போட்டியிடும் எவராவது ஏதாவது இந்த மாவட்டத்திற்கு செய்துள்ளார்களா?.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை பார்த்தால் பலர் கட்சி தாவித்திரியும் வேட்பாளர்களாகவுள்ளனர். வெள்ளிமலை என்பவா ஒரு மாதத்தில் மூன்று கட்சிகளில் இருப்பார்.அவர் பல தேர்தல் கேட்டு தோற்றதே வரலாறு,இயக்கத்தில் இருந்தபோது ஒரு தடைவ அவரை வெற்றிபெறவைத்து பாராளுமன்றம் அனுப்பிவைத்தேன.
படகு சின்னத்தில் தேர்தலில் குதித்துள்ளவர்கள் யோகேஸ்பரன் என்பவர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்;.24வீத வட்டிக்கு காசு கொடுக்கும் ஒருவர்தான் அவர்.அவரால் எத்தனையோ பெண்கள் தற்கொலைசெய்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் சிறிநேசன்,அவர் கூறுகின்றார் கருணா அம்மான் நிரந்தர அபிவிருத்தியை செய்யவில்லையென்று கூறுகின்றார்.வவுணதீவில் உள்ள அவரது வீட்டுக்கு மின்சாரம் கொடுத்ததே நான்தான்.இவர்கள் போன்றவர்கள் பாராளுமன்றம் போய் என்ன செய்யப்போகின்றார்கள்.அமல் 50இலட்சம் ரூபாய்க்காக கட்சி மாறிச்சென்றவர்.
கடந்த மாகாணசபையினை முஸ்லிம்களுக்கு விற்ற பெருமைக்குரியவர் துரைராஜசிங்கம்தான்.கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக இருந்து வாய்க்காலைக்கூட கட்டவில்லை.