குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களுக்கான பொங்கல் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இன்று தைத்திருநாளை பொங்கல் பொங்கு தமிழர்கள் கொண்டாடும் நிலையில் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களுக்கு இந்த உதவிகள்
நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகரினால் இந்த பொங்கல் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்வு கல்லடி உப்போடையில் உள்ள மாநகரசபை உறுப்பினர் செல்வி மனோகரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது வறுமை நிலையில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களை தலைமை தாக்கும் நூறு பெண்களுக்கு பொங்கலுக்குரிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.