மட்டக்களப்பில் 3 பிள்ளைகளின் தாய் காணவில்லை - தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை..!

(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 40-ம் கிராமம், வம்மியடியூற்று பாடசாலை வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான ரவி நளாயினி என்பவர் நேற்று (28.02.2026) முதல் காணாமல் போயுள்ளார்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்று காலை பழுகாமம் வைத்தியசாலைக்குச் சென்று மருந்து எடுத்தவர், பின்னர் அங்கிருந்து பழுகாமம் இலங்கை வங்கி ஏ.டி.எம் (ATM) இயந்திரத்தில் 5000 ரூபாய் பணத்தினைப் பெற்றுள்ளார்.
​அதனைத் தொடர்ந்து காலை 11.00 மணியளவில் வீடு திரும்புவதற்காக பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்றில் ஏறிச் சென்றதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
​காணாமல் போன சமயத்தில் அவர் சாம்பல் நிறச் சேலை (Grey Saree) தங்க ஆபரணங்கள் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகக் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
​தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்:-
இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகக் கீழே உள்ள தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்:
​075 694 0655
​077 384 8385
​074 157 7381