தமிழ் மக்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கொண்டுவரும் தைபிறக்கட்டும். வாழ்த்துச் செய்தியில்- இரா. சாணக்கியன்.




உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கல்.

உயிர்களுக்கு ஆதாரமான சூரியபகவானுக்கும் இயற்கைக்கும் நன்றிகூறும் உன்னதமான  தைப்பொங்கல் நிகழ்வானது தமிழ்மக்களிடத்தே வழக்கத்திலிருந்து வரும் மிகவும் உயர்ந்த நன்றி கூறும் பண்புகளில் ஒன்று.
 என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் விடுத்த பொங்கல் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கைத் தமிழ் மக்களின் தைப்பொங்கல் நம்பிக்கைமிகுந்த எதிர்பார்ப்போடு கடந்து சென்ற நிலையில் இவ்வருடம் கேள்விக்குறியோடு மலர்கிறது.


 தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையும் எம்மிடத்தே உள்ளது , இறையாசியோடு எம் மக்களின் வாழ்வில் துன்பம் நீங்கி மகிழ்ச்சி நிம்மதி நிலைபெறவும் ,அதற்க்காக பாடுபடும் எம் அரசியல் தலைமைகளுக்கும் பலமும் நலமும் கிடைக்க இறைவனைப்பிரார்த்திப்பதோடு அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பொங்கல் வாழ்த்துச் செய்தியில்  குறிப்பிட்டார்