கடவுளின் குழந்தைகளுக்கு உதவிக்கரம்



மட்டக்களப்பில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட ஏறாவூர் பற்று செங்கலடி பிரசேசெயலகதிற்கு உட்பட்ட சித்தாண்டி ,
மாவடி  வோம்பு கிராமத்தில் வசிக்கின்ற கடவுளின் குழந்தைகளான விசேடதேவைக்குட்பட்ட பிள்ளைகளை பராமரிக்கின்ற குடும்பங்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.  

கடந்த 30.12.2019 திங்கட்கிழமை  வாழ்வகம் மனிதநேய மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் அவர்களால்  இவ் உதவிகள்  வழங்கிவைக்கப்பட்டது.