மட்டக்களப்பினை அதிரவைத்த டான் ரீவி

புதிய வருடத்தினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் டான் ரீவியினால் மாபெரும் வானவேடிக்கைகள் நேற்று நள்ளிரவு நடாத்தப்பட்டன.

மட்டக்களப்பின் வரலாற்றில் புதுவருடத்தினை வரவேற்கும் வகையில் நடாத்தப்பட்ட பாரியளவிலான வானவேடிக்கைகள் கொண்ட நிகழ்வாக இது பொறிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தினை மையமாக கொண்டு டான் ரீவி குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த வான வேடிக்கையில் பல்வேறு வகையான வான வேடிக்கைகள் காட்டப்பட்டன.

இதனை கண்டுகளிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறானதொரு வானவேடிக்கையினை தாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லையெனவும் தாங்கள் இந்த புதுவருடத்தினை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.