இடைத்தங்கல் முகாம் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி.





தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னியின் கோரிக்கைக்கு அமைய   வெள்ளத்தால் பாதிப்புற்று  இடம் பெயர்ந்த  மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் உதவிகள் உலர் உணவு உதவி வழங்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிப்புற்று மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் தொடர்பாக மட்டு வாலிபர் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதிற்க்கு அமைய 
தன்னாமுனை மற்றும் சிவபுரம்  இடைதங்கல் முகாமில் வசித்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு   உலர் உணவுப் பொருட்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரால்  வழங்கிவைக்கப்பட்டது .
மேலும் பாதிப்புற்ற மக்களுக்கு தேவையான  அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன ,


 இந்த நிவாரண உதவி வழங்கலில் மட்டு வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.