வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்.





வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  தன்னாமுனை சுனாமி வீட்டுத்திட்ட  (கொலனி ) பகுதியினை
நேற்று  (03.12.2019) செவ்வாய்க்கிழமை    பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்  மற்றும் வாலிபர் முன்னனி தலைவர் லோ.தீபாகரன் ஆகியோர்  பார்வையிட்டனர் .


தமிழரசுக்கட்சியின் வாலிபர்முன்னனியின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினரோடு  வாலிபர் முன்னனி உறுப்பினர்களும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வெள்ள பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மக்களின்  அனர்த்த அவசர நிலைமையைக் கருத்திற் கொண்டு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவப் பிரிவினைத் தொடர்பு  கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் தேவையினை பூர்த்திசெய்வதற்க்கான ஆலோசனைகளையும்     பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.