மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகள் வழங்கும் பணிகள் சுவிஸ் உதயம் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பின் உப செயலாளரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம்,பெரியகல்லாறு உதயபுரம் பாடசாலையின் அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அப்பகுதியில் வறுமை நிலையில் உள்ள சுமார் 70மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பாடசாலை பைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் கல்வி மேம்பாட்டுக்காக கடந்த 15வருடங்களாக சுவிஸ் உதயம் அமைப்பு செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பின் உப செயலாளரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம்,பெரியகல்லாறு உதயபுரம் பாடசாலையின் அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அப்பகுதியில் வறுமை நிலையில் உள்ள சுமார் 70மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பாடசாலை பைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் கல்வி மேம்பாட்டுக்காக கடந்த 15வருடங்களாக சுவிஸ் உதயம் அமைப்பு செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.