ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர் ! பிரசாந்தன்



மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நல்லாட்சியில் ஊடகவியலாளர் முதல் கொண்டு அரச  அதிகாரிகள் முதல் கொண்டு ஊடகவியலாளர்கள் வரை பழிவாங்கப்பட்டுள்ளனர் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.


இன்று(14) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்


மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள்,முகநூல்கள் ஊடாக அறியக்கூடியதாக இருந்தது. கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு வருவோம். இது குறித்து சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் உடன் பேசியுள்ளேன் அதேபோல் பிரதேச செயலாளருடனும் பேச உள்ளேன், இரு தினங்களுக்குள் இது தொடர்பில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்