வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு
இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களினால் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.


இடைத்தங்கல்   முகாமில் வசிக்கும் மக்களுக்கான  அடிப்படைத் தேவைக்கான  பொருட்கள் பகிர்ந்தளிப்பில்
 பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்  அவர்களுடன் தழிழரசுக்கட்சி வாலிபர் முன்னனி தலைவர் லோ. தீபாகரன் மற்றும் வாலிபர் முன்னி உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர்.

தன்னாமுனை மற்றும் சிவபுரம்  இடைதங்கல் முகாமில் வசித்த 80க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கே இவ் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.