திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெளி பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன் செல்வராஜா சிமனியோன் எனவும் தெரியவருகின்றது.
தற்பொழுது அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.