08வுது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் வகையிலான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 428 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை முதல் மாலை 05மணி வரையில் நடைபெற்றது.
மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் மக்கள் மிகவும்ஆர்வத்துடன் வாக்களித்தினர்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (3,98,301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இன்று மாலை வாக்களிப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுவரப்பட்டன.