சுமூகமாக வாக்குப்பதிவு இடம்பெற்ற போதிலும் வாக்களிப்பு வீதம் இன்னும் அதிகரிக்கவில்லை.





மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சுமூகமான முறையில் வாக்குப்பதிவுகள் இடம்பெறுகின்ற போதிலும் நண்பகல் 12.00மணி வரையான காலப்பகுதியில் சுமார் 23% குறைவான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோக பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.


மேலும் பி.ப 02.00மணிக்கு பின்னரான காலப்பகுதியில் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா சாணக்கியன் பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் தமது வாக்கினை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வாக்காளர்கள் இறுதிநேரம் வரை காத்திருக்காது நேரகாலத்துக்கு சென்று முறையாக வாக்குகளை செலுத்துவது வரவேற்புக்குரியது அத்தோடு காலநிலையையும் மக்கள் கருத்தில் கொள்வதும் அவசியம் என குறிப்பிட்டார் .