மியோவாக்கி முறை காடு வளர்ப்பு திட்டம்-2ம் கட்டம்

இந்த நாட்டில் இயற்கையுடன் கூடிய சூழலை எதிர்கால சமூகத்திற்கு வழங்கும் வகையில் விசேட காடு வளர்ப்பு செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.







இயற்கையில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் எதிர்கால சமூகத்தினை கொண்டுசெல்லும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஜப்பானில் மியோவாக்கி என்னும் விஞ்ஞானியினால் முன்னெடுக்கப்பட்ட காடு வளர்ப்பு திட்டத்தினை இலங்கையில் முன்முறையாக மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மியோவாக்கி முறை காடு வளர்ப்பு திட்டம்-2ம் கட்டமானது பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம்  தலைமையில் களுவாஞ்சிகுடி  தெற்கு சேவையாளர் பிரிவில் 04.11.2019 அன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இதன்போது சூழலுக்கு பாதுகாப்பினை அளிக்கும் பல்வேறு மரங்கள் நிகழ்வில் கலந்துகொண்டவர்களினால் நடப்பட்டது.குறுகிய நிலப்பரப்பிற்குள் அடந்த காட்டினை உருவாக்கும் வகையிலேயே இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.