இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இன்று காலை ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
கடும் மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று காலை தீபத்திருநாள் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபத்திருநாளை முன்னிட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட பூஜையில் ஆலய வண்ணக்கர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நாட்டில் நீடித்த சாந்தியும் சமாதானமும் நிலவவும் நாட்டில் இருள்நீங்கள் ஒளிவீசவும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.
கடும் மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று காலை தீபத்திருநாள் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபத்திருநாளை முன்னிட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட பூஜையில் ஆலய வண்ணக்கர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நாட்டில் நீடித்த சாந்தியும் சமாதானமும் நிலவவும் நாட்டில் இருள்நீங்கள் ஒளிவீசவும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.