தங்கேஸ்வரி அம்மாவின் இறுதிக்கிரியை நாளை

தொல்பியல் ஆய்வாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அமரர் செல்வி கதிர்காமன் தங்கேஸ்வரி அவர்களது இறுதிக் கிரியை 2019.10.27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை இடம்பெறும் கேதாரகௌரி விரத காப்புக்கட்டுப் பூசை மற்றும்  தொடர்ந்து திங்கள் கிழமை இடம்பெறும் கந்தசஷ்ரி விரத பூசை என்பவற்றைக் கருத்தில் கொண்டு இறுதிக் கிரியையினை ஞாயிற்றுக் கிழமை பி.ப.1.00 மணிக்கு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.     

 தற்போது கன்னன்குடாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலியினைத் தொடர்ந்து கன்னன்குடாவில் அமைந்துள்ள  அன்னாரின் குடும்ப மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.