மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபை புகலிடத்தில் சிறார்களின் சிறுவர் தின விழா.


மட்டக்களப்பு மெதடிஸ் திருச்சபை புகலிட பாடசாலை சிறார்களின் சிறுவர் தின விழா புகலிட நிர்வாக பணிப்பாளர் அருட்திரு.எஸ்.எஸ் ரெரன்ஸ்  அவர்களின் தலைமையில்  கடந்த புதன்கிழமை  மட்டக்களப்பு நகராட்சி மண்டபத்தில்  இடம்பெற்றது.


 நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை உதவி ஆணையாளர் யூ.சிவராசா,சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை தலைவர் சு.சந்திரகுமார், கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் மற்றும் மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ச.மணிவன்னன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் ,கெளரவிப்பு நிகழ்வுகளோடு பரிசளிப்பு வைபவவும் இடம்பெற்றன. நிகழ்வில் புகலிட மாணவர்களின் பெற்றோர் ,கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .