மட்டக்களப்பில் இரத்ததான முகாம்

வை.எம்.சி.ஏ.யின் ஸ்தாபக தலைவர் சேர் ஜோர்ஜ் வில்லியமின் 175வது ஆண்டினை குறிக்கும் வகையில் மாபெரும் இரத்ததானமுகாம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

“ஒரு துளி உயிரைக்காக்கும்” என்னும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த இரத்ததான முகாமில் பெருமளவானோர் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தப்பற்றாக்குறை நிலவும் நிலையில் அவற்றினை கருத்தில்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு பகுதிகளிலும் இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.