மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் இரு ஆலயங்களின் தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களின் தீர்த்த உற்சவங்கள் இன்று காலை மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்குளத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கள்ளியங்காடு புற்றுநாகம்மா ஆலயம் மற்றும் இருதயபுரம் கிழக்கு அருள்மிகு ஸ்ரீநாகலிங்கேஸ்வரர் ஆலயங்களின் தீர்த்தோற்சவம் இன்று காலை நடைபெற்றது.

ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்று சப்புரத்தில் வீதியுலாவந்து மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்குளத்தில் விசேட கிரியைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து தீர்த்தக்கேணியில் இரண்டு ஆலங்களினதும் தீர்த்தோற்சவம் சிற்பாக நடைபெற்றது.

பிதிர்கடன்களை நிறைவேற்றும் விசேட சக்திகளைக்கொண்ட அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்குளத்தில் தீர்த்தமாடி பிதிர்க்கடன்களையும் பக்தர்கள் தீர்த்துக்கொண்டனர்.

இந்த தீர்த்தோற்சவத்தில் இரண்டு ஆலயங்களிலும் இருந்துவருகைதந்த பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.