மைலம்பாவெளியில் தீ –பாம்புகளும் தீயில் கருகிய சோகம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னந்தோப்பு ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றிலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பகுதிக்கு விரைந்த மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தீயிணைக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
குறித்த பகுதிக்கு வருகைதந்த ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் ஆகியோர் தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவிகளை வழங்கினர்.
இந்த தீயினால் பெருமளவு தென்னை மரங்கள் எரிந்து சேதமாகியுள்ளதுடன் அங்கிருந்த பாம்பு உட்பட பல விலங்களும் தீயில் கருகி உயிரிழந்துள்ளன.