ஏறாவூரில் ஒரே நாளில் மூன்று வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு.








பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீறிநேசன் தனது கம்பெரளிய வேலைத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஏறாவூர் நாலம் குறிச்சி பிரதேசத்தில் முப்பது இலட்சம் பெறுமதியான மூன்று வேலைத்திட்டங்களை இன்று (15.07 ) அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்தார்.





பதினைந்து  இலட்சம் பெறுமதியான ஏறாவூர் நாலாம் குறிச்சி பாடசாலை வீதி புனரமைப்பு வேலைத்திட்டம், பத்து இலட்சம் பெறுமதியான
ஏறாவூர் தமிழ் மகாவித்தியால பாடசாலை சுற்று மதில் அமைப்பு வேலைத்திட்டம் ,   ஜந்து இலட்சம் பெறுமதியான  ஸ்ரீ பத்திரகாளியம்மன்
ஆலய புனரமைப்பு  வேலைத்திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், பெளத்த , இந்து மதகுரு, பாடசாலை அதிபர், ஆலயத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.