வேத்துச்சேனையில் கம்பரளிய வேலைத்திட்டம் நிறைவு.






போரதீவுப்பற்று வேத்துச்சேனை கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் 0.3மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயபுனரமைப்பு பணிகள் நிறைவுசெய்யப்பட்டு  மக்களுக்கு கையளிக்கப்பட்டது.


நேற்று சனிக்கிழமை 20.07.2019 நடைபெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,  போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச்சங்க நிருவாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பொது மக்களினால்  பாராளுமன்ற உறுப்பினரின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.