உயிர்நீர்த்தவர்களுக்காக கல்லடி பாலத்திற்கருகில் ஒன்று திரண்ட மக்கள்

மட்டக்களப்பு கொழும்பு உட்பட பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர்நீர்த்தவர்களை நினைவும் நிகழ்வுகள் நேற்று மாலை நடைபெற்றன.

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒளியேற்றப்பட்டு குண்டுத்தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுpகளிலும் ஒளியேற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கையில் உயிர் நீர்த்த 321பொதுமக்களின் நினைவாக 321 விளக்குகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்லடி கடல்மீன்கள் விளையாட்டுக்கழகம்,கல்லடி முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கம்,கல்லடி பொதுமக்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு விளக்கேற்றிஅ ஞ்சலி செலுத்தினர்.