கிரான்குளத்தில் மோதி தள்ளிய வான் -பரிதாபகரமாக உயிரிழந்த முதியவர்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரான் குளம் பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒருவரை வேகமாக வந்த வான் மோதியதனால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த கிரான்குளம் தர்மபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் செல்லப்பா (62வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அம்பாந்தோட்டையிலிருந்து வந்த வானே இந்த விபத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் வானின் சாரதி காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.