தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலயத்தின் கொடியேற்ற நிகழ்வு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் கொடியேற்றமானது (10.04.2019 புதன்கிழமை காலை செட்டிபாளையம் மாங்காடு கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில்   இருந்து மாட்டு வண்டிலில் கொடி சிலை எடுத்து வரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டு ஆரம்பம்மானது.

கொடிச்சிலை ஆலயத்தை வந்தடைந்ததும் கொடியேற்றத்திற்கான கிரிகைகள் ஆரம்பம்மானது.அதனை தொடர்ந்து காலை 11.30 ஒரு மணியளவில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையாரன் பிரமோற்சவத்திற்கான கொடியேற்றம் இடம் பெற்றத.இவ் கொடியேற்ற நிகழ்வினை ஆலய பிரதமகுரு. க.கு.மோஹனாந்த குருக்கள் நிகழ்த்தி வைத்தார்.இவ் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பல பொது மக்கள் கலந்து கொண்டனர். எதிர் வரும் சித்திரா பௌணமியன்று தீர்த்தஉற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடதக்கவிடயம்.