மட்டக்களப்பில் பல பயனுள்ள செயல்திட்டங்களை திறம்பட செய்து வருகின்ற அமைப்பான மட்டக்களப்பு தமிழ் இளைஞர் ஏற்ப்பாட்டில் (6) உப்போடை பல்நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது எதிர்கால நலனை கருத்தில்கொண்டு மட்டு தமிழ் இளைஞர் சமூக அமைப்பின் யாப்பு முழுவதுமாக சபையில் அலசி ஆராயப்பட்டு அதற்கமைய புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தமிழ் இளைஞர் சமூக அமைப்பின் தலைவராக க.ஜனகன் தெரிவுசெய்யப்பட்டார்.உபதலைவராக த.கிருஷ்ணகாந் அத்துடன் செயலாளராக ந.துஷி, உபசெயலாளர் பா.சுதன், பொருளாளர் செ.ஞானச்செல்வன் மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக நா.திவாகர், அ. ஜனார்த்தன், மு.நமசிவாயம் ல.விஜி, து.சிவனந்தன், சு.சியாம், ம.செந்தூர்வாசன், இ.அன்புராஜ், ம.ஜீவகன் மற்றும் சி.மேகராஜ் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக மயூரன், பி.பிரவாகரன், வ.சுரேந்திரன் , க.ரொனி ப்ரின்சொன், து.மதன் மற்றும் ஆலோசகர்களாக வே.பிரபாகாரன், த.தரனிராஜ் ஆகியோர் இதன்போது தேர்வு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.