தந்தை செல்வாவின் பிறந்ததினத்தில் மாபெரும் இரத்ததான முகாம்.



இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி செல்வ நாயகம் எனும் இயற்பெயர் கொண்ட  தந்தை செல்வாவின் 121 வது பிறந்ததினத்தை முன்னிட்டு வாலிபர் முன்னணியினால் மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு.


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியினால் எதிர்வரும் 31.03.2019 அன்று காலை 09.30 மணி தொடக்கம் பி.ப 01.00 மணிவரை இல 22 நல்லையா வீதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பணிமனையில்  இரத்ததான நிகழ்வினை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இரத்ததானம் செய்து மனித உயிர்காக்கும்  அரும்பணியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்புவிடுப்பதுடன்
 இரத்ததானம் செய்ய விரும்பும் கொடையாளிகள் முற்கூட்டியே தங்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


தொடர்புகளுக்கு

லோ.தீபாகரன் (தலைவர் வாலிபர் முன்னணி)
தொ.இல 0772987647

தே.திலக்சன் (சுகாதாரத்துறை பொறுப்பாளர் வாலிபர் முன்னணி)
தொ.இல. 0777346393, 0703336393