ஏறாவூர் நகரில் தீ –கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது மட்டக்களப்பு மாநகரசபை

மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபைக்கு முன்பாகவுள்ள வீடு ஒன்றில் இன்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தீகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்து காரணமாக வீட்டில் உள்ள பொருட்கள் முற்றாக தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.