தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட மாணவி

கலாசார அலுவல்கள் திணைக்களமும்  பிரதேச செயலகமும் இணைந்து பிரதேச செயலக  றீதியாக நடாத்தப்பட்ட மாணவர்களுக்கிடையிலான கலாசார போட்டியில் மண்முனைப்பற்று பிரதேச  செயலகத்திற்குட்பட்ட மட்/நொத்தாரிஸ் மூத்ததம்பி  வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்ற ஸ்ரீநிவாசு பிரித்விகா சிறுவர் பிரிவில் பங்குபற்றி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய றீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இலக்கிய விழா கடந்த 05.03.2019  கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இம் மாணவி கடந்த ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்ததுடன், மட்/ வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் தரம் 6 இல் தற்போது கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.