கோட்டைக்கல்லாறு புற்றடி ஶ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா - 2019

ஈழமணித் திருநாட்டின் மட்டுமாநகர்தனில் பல வழங்களாலும் சிறப்புற்றோங்கும் கோட்டைக்கல்லாறு எனும் திவ்ய பகுதியில் பிரதான வீதியில் உருவத் திருமேனியுடன் புற்றோடு கோவில் கொண்டு எழுந்தருளி குறைகள் தீர்த்தருளும் புற்றடி ஶ்ரீ நாகலிங்கேஸ்வரப் பெருமானுக்கு நிகழும் விழம்பி வருடம் மாசித்திங்கள் 22ம் நாள் (01/03/2019) வெள்ளிக்கிழமை அவிட்டநட்ச்சத்திரமும்,கும்ப லக்கினமும் சதுர்த்தி நிதியும் கூடிய சுப வேளையில் வருடாந்த உற்சவப் பெருவிழா ஆரம்பமாகி (05/03/2019) செவ்வாய்க்கிழமை காலை 07:00 மணிக்கு சமூத்திர தீர்த்தோற்சபத்துடன் இனிதே நிறைவு பெறும்.