தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள்

மஹா சிவராத்திரி விரதம்   தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. 







அந்த வகையில் சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர்லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய ‘பாலறு பால புஸ்கரணி’ தீர்த்தக்கங்கையில் தீர்த்தநீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு    2019.03.04 இன்று காலை  06.30 மணியளவில் ஆரம்பமாகியது விசேட பூஜையை தொடர்ந்து இவ் தீர்த்த நீர் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது பல அடியார்கள் கலந்து கொண்டு அபிஷேகம் பண்ணியமை குறிப்பிடத்தக்கவிடயம். இவ் தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் நிகழ்வு இன்றய நாள் முழுவது இடம் பெறவுள்ளது. லிங்கோத்பவர் காலத்தில் விசேட ருத்திர யாகமும் இடம் பெறவுள்ளது.