மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களும் உறுதிமொழியினை உரக்க வாசித்து கடமையினை ஆரம்பித்தார்கள்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் இன்றையதினம் புலர்ந்துள்ள  புத்தாண்டில் சுப நேரத்தில்  உறுதிமொழியினை உரத்து வாசித்து தத்தமது  கடமையினை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (01.01.2019) காலை 09.00 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது  தலைமையில் நடைபெற்றது.
இவ் ஆரம்ப நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயீர்நீத்த வீரர்களுக்காக இருநிமிடம் மெளன அஞ்சலி செலுத்தி, அரசாங்க சேவை சத்தியப் பிரமாணம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும்  அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.