மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் இன்றையதினம் புலர்ந்துள்ள புத்தாண்டில் சுப நேரத்தில் உறுதிமொழியினை உரத்து வாசித்து தத்தமது கடமையினை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (01.01.2019) காலை 09.00 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.