முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர் காலமானார்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதர் இன்று மாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது 93வது வயதில் இன்று தனது இல்லத்தில் காலமானார்.கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டுவரையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சேவையாற்றியுள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எப். ஊடாக பாராளுமன்றம் சென்றவர் ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
ஆசிரியர்,அதிபராக இருந்து மட்டக்களப்பின் கல்வி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டுவந்துள்ளதுடன் மட்டக்களப்பின் அடையாளமாக கருதப்படும் பாடுமீன் தொடர்பிலான ஆய்வினை மேற்கொண்டு அதனை உலகுக்கு கொண்டுசென்ற பெருமையினையும் பெற்றுள்ளார்.
அன்னாரின் இழப்பு மட்;டக்களப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகவே அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.