வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகத்தில் நூலகக் கொடியும் நூலகக் கீதமும் வெளியீடு


வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகத்தின் ஏழாவது வருட நிறைவும் தேசிய வாசிப்பு மாதத்தினை ஒட்டி பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கலை இலக்கியம் சார்பான போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பும் நூலகப் பொறுப்பாளர்இதிருமதி.தாரணி தங்கத்துரை தலைமையில் நூலக மேற்தளத்தில் நடைபெற்ற நிகழ்வில், நூலகக்கொடி அறிமுகமும்இநூலகக்கீதமும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித், மற்றும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், கௌரவ அதிதிகளாக, கோறளைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி பத்மலோஜினி லிங்கேஸ்லரன், கிழக்குப்பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம்.என்.ரவிக்குமார், கோறளைப்பற்று பிரதேசசபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகநேசன், நூலகர் திருமதி அப்துல் மஜித் ஜெஸ்மி கப்சா, மற்றும் முன்னாள் பேத்தாழை நூலகர் ரி.சரவணபவான், பேத்தாழை பொது நூலதாபகரின் தாயார் திருமதி கமலா சிவநேசதுரை ஆகியோருடன் எழுத்தாளர் ஆ.மூ.சி.வேலழகன், கவிஞர்.முத்துமாதவன் ஆகியோரும் கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
 அத்துடன் பாடசாலை அதிபர்கள், கிராமசேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், நூலக உத்தியோகத்தர்கள்,முன்பள்ளி ஆசிரியர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், விளையாட்டுக்கழகத்தினர்,வாசகர் வட்டத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

சிறப்பு நிகழ்வாக இலங்கையில் உள்ள பொது நூலகங்கள்; இல்லாத நூலகக்கொடி அறிமுகமும், நூலகக்கீதமும் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் கலைஞர் கௌரவுமும் பாராட்டுப்பத்திரம் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. தேசிய ரீதியில் மூன்று விருதுகளைப்பெற்ற இந்நூலகம் பல்வேறு சிறப்பம்சங்ககைப் பெற்றுவிளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.