மட்டக்களப்பு மாநகர சபையின் உபவிதிமுறைகளை புதிய
உபவிதிகளாக மாற்றி அமைப்பதற்கான
கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாநகர சபை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாநகர சபையின் 1947 -16 இலக்க சுகாதார சட்டத்திற்கு அமைய 129 ,
130 , 131 இலக்க உபவிதிகளுக்கு ஏற்ப மாநகர சபை அதிகாரங்களின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையில் தற்போதைய
நடைமுறையில் உள்ள உபவிதிமுறைகளை புதிய உபவிதிகளாக
மாற்றி அமைப்பதற்கான கலந்துரையாடல் இன்று (29)
வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை அலுவலக கேட்போர் கூடத்தில்
நடைபெற்றது .
மட்டக்களப்பு
மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல் தலைமையில்
நடைபெற்ற கலத்திரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற
கழிவு முகாமைத்துவம் , நுகர்வோருக்கு சுகாதாரமற்ற இரசாயன கலந்த உணவு விநியோகம் , மக்கள் எதிர் நோக்குகின்ற பொது
சுகாதாரம் பிரச்சினை , சுகாதாரமற்ற
முறையில் நகர் பிரதான வடிகான்களில் கழிவு
நீர் வெளியேற்றல் போன்ற பல்வேறு விடயங்கள்
கலந்துரையாடப்பட்டன
மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல்
தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி
சத்தியசீலன் ,பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , கால்நடை வைத்திய அதிகாரிகள்
,,சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் ,ஜெயிக்க தொண்டர் சேவை உறுப்பினர் போதனா
வைத்தியசாலை அதிகாரிகள் ,வர்த்தக சங்க தலைவர் , வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள்
,மாநகர சபை உறுப்பினர்கள் ,மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் , ஆகியோர்
கலந்துகொண்டனர்