(லியோன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்சகோதரி மேரி சாந்தினி தலைமையில் இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
இன்று நடைபெற்ற வருடாந்த கல்லூரியின் ஒளிவிழா தின நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்
பாடசாலையில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி
கௌரவிக்கப்பட்டனர் .
நடைபெற்ற கல்லூரியின்
வருடாந்த ஒளிவிழா தின நிகழ்வில் பிரதம விருந்தினராக வெளிநாட்டு
மிசனரி சேவையின் இலங்கைக்கான சகோதரர் கெரி
புரோத்ரோ மற்றும் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் ,
மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர்